யார் இந்த பாண்டியர்கள்...
பாண்டியர்கள் பாண்டியர்கள் பழந்தமிழ் நாட்டை ஆண்ட வேந்தர்களுள் ஒருவராவர். மற்ற இருவேந்தர்கள் சேரர்களும் சோழர்களும் ஆவர். பாண்டியர்கள் மதுரை,இராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் தற்போதைய கேரளத்தின் தென்பகுதி ஆகியவற்றை ஆட்சி செய்தனர். இந்தியாவில் எந்த ஒரு மன்னர் குலத்துக்கும் இல்லாத நெடிய வரலாறு பாண்டியர்களுக்கு உண்டு.பாண்டியர்களை முற்காலப் பாண்டியர்கள், கடைச்சங்ககாலப் பாண்டியர்கள், இடைக்காலப் பாண்டியர்கள் ,பிற்காலப் பாண்டியர்கள் ,தென்காசிப் பாண்டியர்கள் என வகைப்படுத்தலாம். பாண்டியதேசம் சோழதேசத்திற்குத் தெற்கிலும்,சேரதேசத்திற்குக் கிழக்கிலும்,ஓர் அகன்று பரவி இருந்த தேசம் ஆகும்.இந்த பாண்டிய தேசத்தில் பூமி மேற்கே உயரமாகவும், கிழக்கே சரிந்தும் தென்வடலாய் நீண்டும்,கடல் ஓரங்களில் சரிந்தும் மேடும்,பள்ளமுமாகக் காணப்படும். இந்த தேசத்தில் நிறைய மலைகள் உண்டு, இவற்றில் பொதியம் மலையே மிகவும் உயரமானது. சிறு,சிறு குன்றுகளும், இத்தேசத்தின் நடுவிலுள்ள சமதளமான பூமியில் சிறு,சிறு காடுகளும் செழிப்பான...